தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
நலச்சங்கத்தின் நன்கொடையாளர் ஈச்சனாரி பாலு காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

நலச்சங்கத்தின் நன்கொடையாளர் ஈச்சனாரி பாலு காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

Radheyan 21 Oct 2021 | 04:44 PM
பகிர்:

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், சிறந்த சமுதாயப்பற்றாளருமான ஈச்சனாரி பாலு (எ) V.பாலசுப்பிரமணியம் (77)இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை ஈச்சனாரியிலுள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். கோவையில் நிதிநிறுவனம் நடத்திவந்த திரு.பாலசுப்பிரமணியம் சுசி பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்தார். இவர் சமூகசேவகி திருமதி.கௌரி சுரேஷ் அவர்களின் சிறிய தந்தை என்பதும், சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் "பர்பிள் கிளப்" உறுப்பினர் (ரூ.200000/- அதிகமாக நன்கொடை வழங்கியோர்) திருமதி.லதா நஞ்சுண்டகுமார் அவர்களின் தாய்மாமன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்பிற்கு இலக்கணமாய்

அவனியில் வாழ்ந்து

பண்புடைமை காத்து

பக்குவமாய் வழி நடந்தீர்

ஈகை பல செய்து

எல்லோருக்கும்

நல்லவராய் நாணயமாய்

நடந்தீர்

ஏனோ இறைவன் இடை

நடுவில்

பறித்து விட்டான்

துன்புற்றோர் துயர் துடைத்து

துணைக்கரமாய் அடைக்கலம்

தந்த உம்மை

ஆண்டவன் ஏனழைத்தான்

பண்புள்ளோரை பல காலம்

வாழவிடக் கூடாதென்றோ ?

என் செய்வோம்

இறைவன் சித்தம் இது

இனி காணமுடியாத

சோக நிலையோடு

இங்கிருந்தே ஏங்கியழகிறோம்.

அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு balakrishnanan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண