தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
DNT-க்கு 200 கோடி ஒதுக்கீடு! DNT சாதி சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

DNT-க்கு 200 கோடி ஒதுக்கீடு! DNT சாதி சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

Radheyan 18 Feb 2022 | 04:10 PM
பகிர்:

மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் 2015-ஆம் ஆண்டு சீர்மரபு பழங்குடி, நாடோடி, அரைநாடோடி மக்களுக்கு தேசிய ஆணையம் நிறுவப்பட்டது. இந்த ஆணையம் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது.இந்தியாவில் ஏறக்குறைய 13 கோடி மக்கள் குற்றப்பழங்குடிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1950 முதல் அனந்தசயன அய்யங்கர் ஆணையம், ரோஹிணி ஆணையம்,  இதாதே ஆணையம் போன்ற பல்வேறு ஆணையங்கள் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதாதே ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் Scheme for Economic Empowerment Of Denotified/Nomadic/Semi Nomadic (SEED) Communities சீர்மரபு பழங்குடி/நாடோடி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச பயிற்சி,  இன்சூரன்ஸ், வீட்டுவசதி, தொழில் (வாழ்வாதாரம்) ஆகிய நான்கு பிரிவுகளில் தலா 50 கோடி வீதம் ரூபாய் 200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பயனாளிகளை நேரடியாக ஆணையம் தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் பலனை முழுமையாக நமது சமுதாயம் பயன்படுத்திக்கொள்ள மாணவச்செல்வங்கள் உள்ளிட்ட அனைவரும் விரைவில் DNT சான்றிதழ் வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து மேலும் விபரங்களை அறிய www.thottianaicker.com இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (vkrsnsgroup@gmail.com) DNT சாதி சான்றிதழ், தொடர்பு எண் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண