தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மாவீரனின் 221-வது வீரவணக்கநாளில் இடஒதுக்கீடு கோரி வீரமுழக்கமிட்ட கம்பளத்தார்கள்.

மாவீரனின் 221-வது வீரவணக்கநாளில் இடஒதுக்கீடு கோரி வீரமுழக்கமிட்ட கம்பளத்தார்கள்.

Admin 17 Oct 2020 | 05:58 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள் பல்வேறு சமுதாய அமைப்புகளாலும், சமுதாய மக்களாலும் தமிழகமெங்கும் படுவிமர்சையாக அனுசரிக்கப்பட்டது. ஏற்கனவே அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு, விடுதலைக்களம், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல் உள்ளிட்ட அமைப்புகள் வீரவணக்கநாளை ஓ.பி.சி மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் வீரமுழக்கநாளாக அனுசரிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 


அதனடிப்படையில், நாமக்கல்லில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவீரன் கட்டபொம்மனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வீரமுழக்கமிடப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மிகச்சிறந்த முறையில் விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜனும், அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களும்  செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

postgallery(221)

கற்றறிந்தவர்களும், அரசு மற்றும் தனியார்துறைகளில் மிகப்பெரிய பதவிகளில் உள்ளவர்களையும், தொழிலதிபர்களையும் சமுதாயத்திற்கு உருவாக்கித்தந்துள்ள நாமக்கல் மாவட்டத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அவசியம், தேவை குறித்து நன்கு அறிந்தவர்கள் என்றால் மிகையல்ல. இது அனைத்து பகுதிமக்களுக்கும் கிட்டவேண்டும், சமுதாயம் பலன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தலைநகர் சென்னையில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் மாவீரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து எளிய முறையில் திரு.இராஜா அவர்கள் விளக்கிப்பேசினார். இதனைத்தொடர்ந்து இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வீரமுழக்கமிடப்பட்டது.

postgallery(222)

இது தவிர மாநிலம் முழுவதும் ஓபிசி பிரிவில் இடம்பெற்றுள்ள  முக்குலத்தோர், முத்தரையர்,  வேட்டுவக்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கோரி பதாகைகளை ஏந்தியபடி இடஒதுக்கீடு வேண்டி வீரமுழக்கமிட்டனர்.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Veerapandiya Kattabomman
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண