தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
தொழிலால் உயர்ந்தவர்; ஈகையால் நிலைத்தவர் – திரு. S. இராமராசு

தொழிலால் உயர்ந்தவர்; ஈகையால் நிலைத்தவர் – திரு. S. இராமராசு

Admin 27 May 2020 | 03:56 PM
பகிர்:

திரு. S. இராமராசு அவர்கள் 10.06.1958 அன்று விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகிலுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில், திரு. சுந்தரப்ப நாயக்கர் – திருமதி பெருமாளம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எளிமை, உழைப்பு, நேர்மை ஆகியவற்றை வாழ்வின் அடிப்படை மதிப்புகளாகக் கொண்ட குடும்பச் சூழலில் வளர்ந்த அவர், மேல்நிலைக் கல்வி வரை பயின்ற பின்னர் பெற்றோருக்கு துணையாக விவசாயப் பணியில் ஈடுபட்டார்.

இவருக்கு திருமதி R. ருக்மணிதேவி என்ற மனைவியும், R. சத்ய ஸ்ரீ என்ற மகளும், R. சத்ய நாராயணன் என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தின் உறுதியான ஆதரவுடன் தொழில், சமூகப் பணி, ஆன்மீகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமநிலையுடன் பயணித்து வருகிறார்.

விவசாயியிலிருந்து வெற்றிகரமான தொழிலதிபராக!

விவசாயத்தில் மட்டுமே வாழ்க்கையை நிறுத்திவிடாமல், தனக்கென ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், 1980-ஆம் ஆண்டு சிவகாசியில் ஒரு தேநீர் கடையை தொடங்கினார். கடின உழைப்பு, சிக்கனமான வாழ்க்கை, நேர்மையான வணிக அணுகுமுறை ஆகியவை அவருக்கு ஆரம்ப வெற்றியை அளித்தன.

ஆனால் அதில் திருப்தி அடையாமல், புதிய வாய்ப்புகளை ஆராய்ந்த அவர், 1984-ஆம் ஆண்டு சிவகாசியின் புகழ்பெற்ற பட்டாசுத் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். கம்பி மத்தாப்பு தயாரிப்பிற்குத் தேவையான இரும்புக் கம்பிகளை உற்பத்தி செய்து, முன்னணி பட்டாசு நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கி சிறப்பான முன்னேற்றம் கண்டார்.

“சுகப்பிரியா” – நம்பிக்கையின் பிராண்டு!

தொடர்ச்சியான வெற்றியின் அடையாளமாக, சில ஆண்டுகளில் "சுகப்பிரியா மெடிக்கல்ஸ்" என்ற மருந்தகத்தைத் தொடங்கினார். தரமான சேவையின் மூலம் "சுகப்பிரியா" என்ற பெயர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டாக உயர்ந்தது.

இதற்குப் பின்னரும் புதிய சிந்தனையுடன் செயல்பட்ட அவர், 1996-ஆம் ஆண்டு "சுகப்பிரியா மினரல் வாட்டர்" நிறுவனத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் தொடங்கி, சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகித்தார்.

அந்தக் காலகட்டத்தில், மினரல் வாட்டர் என்ற கருத்தே பெருநகரங்களில் கூட பரவலாக இல்லாத நிலையில், ஒரு "C" Grade நகரமான சிவகாசியில் இந்த முயற்சியை மேற்கொண்டது அவரது தொலைநோக்கு சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

ஒரு தொழிலிலிருந்து பல தொழில்களுக்கு!

மினரல் வாட்டருக்கான தேவை அதிகரித்ததை முன்னறிந்து, 2005-ஆம் ஆண்டு "சத்யா PET Industries" என்ற நிறுவனத்தைத் தொடங்கி, PET பாட்டில்களைத் தானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் உற்பத்திச் செலவை குறைத்து, தரத்தையும் நிலைநிறுத்தினார்.

பின்னர் 2016-ஆம் ஆண்டு "சுகப்பிரியா Food Products" நிறுவனத்தைத் தொடங்கி, ரொட்டி, பன், ரஸ்க் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்து மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.

இதிலும் நின்றுவிடாமல், இயற்கை உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் "சுகப்பிரியா மரச்செக்கு எண்ணெய்" உற்பத்தி நிலையையும் நிறுவி, தரமான எண்ணெய்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

“குற்றால மினரல் வாட்டர்” – புதிய வெற்றியின் தொடக்கம்!

வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் எண்ணத்தில், 2019-ஆம் ஆண்டு "குற்றால மினரல் வாட்டர்" நிறுவனத்தைத் தொடங்கினார். தென்மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றால அருவி நீர்ப்பிடிப்பு பகுதியை ஆதாரமாகக் கொண்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்து வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வருகிறார்.

இன்று "சுகப்பிரியா" நிறுவனம் தரத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், ISO தரச்சான்று பெற்ற நிறுவனமாகவும் சிறப்புடன் விளங்குகிறது.

சமூகப் பணியில் தன்னலமற்ற அர்ப்பணிப்பு!

தொழிலில் வெற்றி பெற்றாலும், சமூகப் பொறுப்பை மறக்காதவர் திரு. இராமராசு.

சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கல்வி, பொதுநல மற்றும் சமூகத் தேவைகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

தான் பிறந்த பிள்ளையார்நத்தம் கிராம அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் முக்கிய பங்காற்றினார்.

அத்துடன், கிராம ஆரம்பப்பள்ளியைத் தத்தெடுத்து,

மேசை, நாற்காலிகள்

கழிவறைகள்

மின்விசிறிகள்

குழாய் விளக்குகள்

பராமரிப்பு பணிகள்

உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தனது நிறுவனத்தின் சார்பில் செய்து வருகிறார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக ரோட்டரி சேவை!

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக "Rotary Club of Sivakasi" உறுப்பினராக இருந்து, அக்கிளப்பின் அனைத்து பொதுநலத் திட்டங்களிலும் தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவரது சேவைப் பயணம், தொழில் வெற்றியையும் சமூக அக்கறையையும் இணைத்துச் செல்லும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ஆன்மீக வாழ்விலும் உயர்ந்த முன்மாதிரி!

திரு. இராமராசு அவர்களும் அவரது குடும்பத்தினரும், கேரள மாநிலம் வடகரை சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்களின் தீவிர சீடர்கள்.

அவரது ஆன்மீக அமைப்பு மேற்கொள்ளும் பல்வேறு மனிதநேய மற்றும் பொதுநலச் சேவைகளுக்கு தாராளமாக உதவி செய்து வருவது அவரது ஆன்மீகப் பற்றையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறது.

மாணவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்காக மூன்று ஏக்கர் மைதானம்!

திரு. இராமராசு அவர்களின் சமூகப் பணிகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவது பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மூன்று ஏக்கர் கைப்பந்தாட்ட மைதானம் ஆகும்.

சுகப்பிரியா மினரல் வாட்டர் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம், அப்பகுதி மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்கும் மையமாக விளங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளை தனது சொந்த செலவில் நடத்தி,

போட்டி ஏற்பாடுகள்

பரிசுகள்

மாணவர்களுக்கு தேவையான வசதிகள்

என அனைத்தையும் தன்னார்வமாக மேற்கொண்டு வருகிறார்.

சமுதாய முன்னேற்றத்திற்கும் உறுதியான ஆதரவு!

தொழில் வெற்றியை சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதில் நம்பிக்கை கொண்ட திரு. இராமராசு அவர்கள், பல்வேறு சமுதாய அமைப்புகளுக்கு தாராளமாக உதவி செய்து வருகிறார்.

குறிப்பாக, சென்னை வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டிடப் பணிக்காக ₹2,00,000-க்கும் அதிகமான நன்கொடை வழங்கி, அந்தச் சங்கத்தின் "Purple Club" உறுப்பினராக பெருமை பெற்றுள்ளார்.

அவரது ஈகை மனப்பான்மை, சமூகத்தின் நன்றியையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது.

நிறைவுரை!

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை மற்றும் தொழில் முனைப்பால் பல்வேறு வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கியவர் திரு. S. இராமராசு அவர்கள்.

தொழிலில் புதுமை, வணிகத்தில் நேர்மை, சமூகப் பணியில் தன்னலமற்ற ஈடுபாடு, கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, ஆன்மீகப் பற்றும் மனிதநேயமும் இணைந்த அவரது வாழ்க்கை, வருங்கால தொழில் முனைவோருக்கும் சமூகச் சேவையாளர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகும்.

"தொழிலால் உயர்ந்தவர்; ஈகையால் நிலைத்தவர்" என்ற பெருமைக்குரிய இந்த மகத்தான ஆளுமை, மேலும் பல புதிய சாதனைகளைப் படைத்து, கம்பளத்தார் சமுதாயத்திற்கும், தமிழகத்திற்கும், தொழில்துறைக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

உழைத்தார்கள்-உயர்ந்தார்கள் தமிழ்நாடு Sugapriya Mr.S.Ramarasu Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண