தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு உறுப்பினர் - அரவக்குறிச்சி.திரு.P.பாலசுப்பிரமணியன்

ஒன்றியக்குழு உறுப்பினர் - அரவக்குறிச்சி.திரு.P.பாலசுப்பிரமணியன்

Admin 27 May 2020 | 10:17 PM
பகிர்:

திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் 12.06.1977-ல் கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி அருகேயுள்ள பால்வார்பட்டியில் திரு.பழனிச்சாமி- திருமதி. முத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாக பிறந்தார்.  எஸ்.எஸ்.எல்.சி.வரை கல்வி பயன்றவர், பெற்றோர்களுக்கு உதவியாக தீவிர விவசாய பணிக்கு திரும்பினார்.  இவருக்கு திருமணமாகி திருமதி.B.கவிதா என்ற மனைவியும் B.கிருபாகரன், B.கிஷோர்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

postgallery(113)

விவசாயப்பணிகளுக்கிடையே, நிதி நிறுவனமும் நடத்தி வரும் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள், பொதுவாழ்விற்கு புதிய வரவு. பொதுவாழ்வில் ஈடுபடும் எண்ணத்துடன் அஇஅதிமுக-வில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டவர், கழக நிகழ்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். 

பொதுவாழ்விற்கு காலதாமதமாக வந்தாலும், தேர்தல் அரசியலுக்கு உடனடியாக வந்தவர்,  கடந்த டிசம்பர் 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அரவக்குறிச்சி ஒன்றியம், 3-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் அ இஅதிமுக சார்பில் களமிறங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றிபெற்று ஒன்றிய கவுன்சிலாராக தன் பொதுவாழ்வைத் தொடர்கிறார் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.


குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Aravakkuruchi.Mr.P.Balasuburamaniyan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண