தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
சமூகசேவகி கௌரி சுரேஷ் தந்தையார் மறைவு

சமூகசேவகி கௌரி சுரேஷ் தந்தையார் மறைவு

Radheyan 13 Jun 2023 | 05:53 PM
பகிர்:

கோவை மாவட்டம், ஈச்சனாரியைச் சேர்ந்தவரும், தட்ஸ் மை சைல்ட் என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், சிறந்த சமூகசேவகியுமான திருமதி.கௌரி சுரேஷ் அவர்களின் தந்தையுமான திரு.V.S.மணியன் (எ) V.சுப்பிரமணியன் (83) இன்று முற்பகல் 11 மணியளவில் கோவையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை மதுக்கரையிலுள்ள ஏசிசி சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த திரு.மணியன் அவர்கள் பணி ஓய்விற்குப்பின் கோவைப்புதூரில் குடும்பத்தினரோடு வசித்து வந்தார். சிறந்த சமுதாயப்பற்றாளரான மணியன் சமுதாய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து வந்தவர். தந்தையாரை இழந்துவாடும் சமூகசேவகி திருமதி.கௌரிசுரேஷ் அவர்களுக்கும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Gowri Suresh Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண