தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
நன்கொடையாளர், ஆசிரியர் திரு.இராமன் மறைவுக்கு இரங்கல்.

நன்கொடையாளர், ஆசிரியர் திரு.இராமன் மறைவுக்கு இரங்கல்.

Radheyan 18 Oct 2025 | 04:23 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு.ராமன் M. A., B.T.,அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை காலமானார். அன்னாின் மறைவிற்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.ராமன் M. A., B.T.,  பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.இராமன் அவர்கள் மிகுந்த சமுதாயப்பற்று கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், காவல்துறை முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளருமான நினைவில் வாழும் S.G ராமசாமி அவர்களின் தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தலைநகரில் கம்பளத்தாருக்கென்று ஒரு கட்டடத்தை உருவாக்க வேண்டும் என்று நிர்வாகிகள் முடிவெடுத்தபோது முதன்முதலில் ரூபாய் 10,000/- வழங்கி நம்பிக்கையூட்டியவர் என்பது இராஜகம்பள சமுதாய நலச்சங்க வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

பணிநிறைவுக்குப்பிறகு குடும்பத்தினருடன் சொந்த கிராமத்தில் வசித்துவந்த இராமர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு இயற்கை எய்தினார்.  அன்னாரின் பூத உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப்பின் இன்று (18.10.2025-சனிக்கிழமை) பாலவனத்தம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆசிரியரும், சங்க நங்கொடையாளருமான அமரர்.இராமர் அவர்களின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Raman thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண