தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரின் 53-ஆவது நினைவு நாள்

கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரின் 53-ஆவது நினைவு நாள்

Admin 17 Jun 2020 | 07:05 PM
பகிர்:

கவிராஜ பண்டிதர். திரு.ஜெகவீர பாண்டியனார்

இந்தியா−சீனா−பூடான் த்ரீ ஜங்ஷன் எல்லைப் பிரச்னையில் 1963-இல் சீனா வீரர்களை எதிர்கொண்டு தடுத்த நம் நாட்டு வீரா்களுக்கு 1965ல் செய்யுள் எழுதிய தீர்க்கதரிசி, பெரும்புலவர். கவிஞர்.ஜெகவீர பாண்டியனாரின் 53வது நினைவுதினம் இன்று...


57-ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இந்திய- சீனா எல்லையில் நமது இராணுவ வீரா்கள் சீனவீரா்களை எதிர் கொண்டு தாக்கியுள்ளதை செய்தித்தாளில் படிக்கிறோம். கவிராஜ பண்டிதரின் 53-ஆவது நினைவு நாளான இன்று, நமது இராணுவ வீரர்களைப் பாராட்டி 1965-ல் "பாரத நாட்டு வீரா்கள்" என்ற தலைப்பில் கவிபாடியதை நினைவுபடுத்திக்கொள்வது, நமது வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

"வீரமே எங்களுக்கு வெற்றியை விரைந்து நல்கிக்

 கோரமே புரியும் தீய கொடியரைச் சிதைய நூறிச்

சீறுயர் தரும நீதி செறிந்தென்றும் சிதைந்து நிற்க்கும் 

பாரத வீரா் மேன்மை பார் எங்கும் பரவச் செய்க"....

என்று கவிவடித்த கவிராஜரின் 53-ஆவது நினைவு நாளில் பெருங்கவியை நினைவில் கொள்வோம்.

வாழ்க கவிராஜர் புகழ்.

தகவல் உதவி: திரு.மாப்பிள்ளைசாமி (எ) அய்யனார்,சிவகாசி.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Gaviraja Pandithar Jegaveera Pandiyanar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண