தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
அருப்புக்கோட்டை திரு.கு.இராமச்சந்திரன் அமரரானார்...

அருப்புக்கோட்டை திரு.கு.இராமச்சந்திரன் அமரரானார்...

Radheyan 11 May 2021 | 04:03 PM
பகிர்:
1938-2021. சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகர் திரு மு.சுப்பையா (ஓய்வுபெற்ற இணை பதிவாளர்) அவர்களின் மைத்துனரும், மேற்படி சங்கத்தின் உறுப்பினர்களான திரு. து.ராதாரவி & திரு. சீ.சதிஷ் ஆகியோர்களின் பெரியப்பாவுமான அருப்புக்கோட்டை திரு.கு.ராமச்சந்திரன் (கூட்டுறவு தணிக்கை அலுவலர் - ஓய்வு) 10.05.2021 அன்று காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

அன்னார் பணியில் இருந்த போது பல்வேறு ராஐகம்பள சமுதாய சங்க பணிகளிலும், ஓய்வுபெற்ற பின் GAINTS  என்ற சமூக நல அமைப்பின் மூலம் பல்வேறு நலப்பணிகளையும் செய்து வந்ததின் மூலம் அனைவரது நன் மதிப்பையும் பெற்றிருந்தார். மேலும் அவர் வசித்து வரும் திருக்குமரன் நகர் பகுதியில், ராஜிவ் காந்தி குடிநீர் திட்டப் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு சிறப்பாக திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளதன் மூலம் இப்பகுதி வாழ் மக்களின் அன்பைப் பெற்ற பெருந்தகையாளராவார். அவருக்கு திருமதி.தனலட்சுமி என்ற மனைவியும் திரு. தமிழ்ச்செல்வன் என்ற மகனும் திருமதி. ராமலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார்,உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண