தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
நம் தலைவர்கள் கொண்டாடிய பெரியாரின் 143-வது பிறந்தநாள்!

நம் தலைவர்கள் கொண்டாடிய பெரியாரின் 143-வது பிறந்தநாள்!

Radheyan 17 Sep 2021 | 11:47 PM
பகிர்:

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள பெரியாரின்  திருவுருவ சிலைக்கு விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பெரியாரின் 143-வது பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு விடுதலை களம் கட்சி நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேசியவர் அனைத்து சமூக மக்களுக்கான  இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மாவட்ட பொறுப்பாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட மகளிரணி வசந்தாமணி மற்றும் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த ஈச்சனாரி.மகாலிங்கம், அதிமுக வைச் சேர்ந்த அருப்புக்கோட்டை அ.காசிராஜன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண