தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஈரோடு,கரூரைத் தொடர்ந்து விருதுநகரிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமைக்கு சவால்!

ஈரோடு,கரூரைத் தொடர்ந்து விருதுநகரிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமைக்கு சவால்!

நிருபர் 19 Sep 2021 | 07:47 PM
பகிர்:

ஈரோடு, கரூர் மாவட்டங்களைத் தொடர்ந்து விருதுநகரிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமைக்கு சவால் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செங்குளம் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவிலில் 300 ஆண்டுகாலமாக கம்பளத்தார், வண்ணார், நாவிதர், ஆசாரி சமூகங்களோடு இணைந்து  வழிபட்டு வருகின்றனர். இந்த பாரம்பரிய உரிமைமிக்க இக்கோவிலில் பீடம் அமைக்க கிராமத்தினர் ஒருமனுதாக தீர்மானித்து பொதுமக்கள் நன்கொடையுடன் பணியை தொடங்கிய நிலையில், இந்த கிராமத்திலிருந்து பலஆண்டுகளுக்கு முன் வெளியூருக்கு குடிபெயர்ந்த ஒருவர் அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரை மையமாக வைத்து அதிகாரிகள் வாய்மொழியாக தடை ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரிகளின் இந்த அத்துமீறலைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நாளை மனு அளிக்கவுள்ளார் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்கின்றனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ko.nagarajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண