தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
விவசாயிகளின் விடிவெள்ளியின் 37-வது நினைவுநாள்!

விவசாயிகளின் விடிவெள்ளியின் 37-வது நினைவுநாள்!

Radheyan 22 Dec 2021 | 04:38 PM
பகிர்:

சமீபகாலத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டு ஓராண்டுகள் டெல்லியை முற்றுகையிட்டு முடக்கியது போல், 1950-களில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை 16 மணி நேரத்திலிருந்து 4-மணி நேரமாக அன்றைய அரசு குறைத்த பொழுது யாராலும் ஒன்றிணைக்க முடியாத அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகள் என்று சொல்லப்படும் விவசாயிகளை ஒன்றிணைத்து, தமிழகத்தில் மாபெரும் போராட்டங்களை நடத்தி அன்றைய ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தவர் அமரர். சி.நாராயணசாமி நாயுடு. கோவையில் விவசாயிககளை ஒன்றுதிரட்டி இவர் நடத்திய போராட்டத்தின் காரணமாக மீண்டும் விவசாயத்திற்கு 16 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக போராடியதோடு, இலவச மின்சாரம் வேண்டுமென போர்க்குரல் கொடுத்தவர் சி.நாரயணசாமி நாயுடு அவர்கள் 21.12.1984-இல் காலமானார்.

அன்னாரின் 37-வது நினைவுநாளையொட்டி (21.12.2021) கோவை அருகே, வையம்பாளையத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் பூவரசி இராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண