தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
புதூர் பேரூராட்சி தேர்தல் களத்தில் நேரடியாக மோதும் வேட்பாளர்கள்!

புதூர் பேரூராட்சி தேர்தல் களத்தில் நேரடியாக மோதும் வேட்பாளர்கள்!

Radheyan 14 Feb 2022 | 04:40 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர்(வி) பேரூராட்சியில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளதால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆளும் கட்சியான திமுக-வில் ஒருசிலரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் மிக அதிகப்படியானோரும் களம் புகுந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை பெருவதில் கடும் போட்டி காணப்படுகிறது.

 இதில் புதூர்(வி) பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சூ,மல்லுச்சாமி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

இதே வார்டில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் திரு.நா.முனீஸ்வரன் அவர்கள். இரு பிரதான கட்சி வேட்பாளர்களும்  ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் நேரடி போட்டி நிலவுகிறது.


இதே புதூர் (வி) பேரூராட்சி 12-வது வார்டில் அதிமுக சார்பில் திருமதி.அ.மலர்க்கொடி அவர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அதேபோல் இதே பேரூராட்சியில் 8-வது வார்டில் சுயோட்சையாக களமிறங்கியுள்ளார் திரு.கோ.செல்லப்பாண்டியன் அவர்கள். இவருக்கு தண்ணீர்குழாய் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் களத்தில் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் சாலைவசதி, குடிநீர்வசதி, தெருவிளக்கு, சுகாதாரம், முதியோர் உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு வழங்கி வாக்குவேட்டையாடி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு urban body election thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண