தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சமுதாய தொண்டாற்றிய ஜமீன்தாருக்கு நினைவஞ்சலி! விடுதலைக்களம் அழைப்பு

சமுதாய தொண்டாற்றிய ஜமீன்தாருக்கு நினைவஞ்சலி! விடுதலைக்களம் அழைப்பு

Radheyan 14 Apr 2022 | 02:09 AM
பகிர்:

பேரையூர் ஜமீன்தாரரும் , தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், வீரபாண்டிய கட்டபொம்மன் இதழின் முன்னாள் ஆசிரியரும், தன் வாழ்நாள் இறுதிவரை சமுதாய தொண்டாற்றியவருமான அமரர்.மு.பரதபாண்டியன் அவர்களின் நினைவுநாளையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (15.04.2022)காலை 10.00 மணி அளவில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் அன்னாரின் திருவூவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

செல்வந்தராய் பிறந்து சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை தொடர்ந்து இயக்க நிலையில் வைத்திருந்தவர் ஜமீன்தார் மு.பரதபாண்டியனார். அந்னாரின் நினைவுநாளில் அவரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் வென்றெடுக்க சமுதாய நலனில் அக்கறையுள்ளவர்கள் உறுதி ஏற்போம். ஏப்ரல்'15-இல் நடைபெறும் நினைவஞ்சலி கூட்டத்தில் அன்னாருக்கு புகழ்சேர்க்க வாருங்கள் என்று நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mu.Bharathapandian thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண