தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஏப்'22-இல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்!

ஏப்'22-இல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்!

Radheyan 16 Apr 2022 | 01:08 AM
பகிர்:

உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்த வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை, உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு மாறாக மீண்டும் அவசர சட்டத்தை தமிழக அரசு முயல்வதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று தமிழக முதல்வர் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரோடு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். 115 சமூகங்களை கடந்த ஓராண்டாக சந்திக்க மறுக்கும் தமிழக முதல்வர் ஒரு சாதிக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது மற்ற சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

115 சமூகங்கள் மீது பாரமுகம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை நாளான ஏப்ரல்'22-இல் தலைமைச்செயலக முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என சமூக நீதி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் வருங்கால தலைமுறைகளின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு உரிமயை பாதுகாத்திட தமிழகம் முழுவதிலிமிருந்து பெருமளவு இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென தொட்டிய நாயக்கர் சமுதாய இடஒதுக்கீடு மீட்புக்குழு வேண்டுகோள் வைத்துள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Agitation thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண