தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞருக்கு தலைவர்கள் வாழ்த்து!

மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞருக்கு தலைவர்கள் வாழ்த்து!

Radheyan 08 Aug 2023 | 01:01 AM
பகிர்:

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சரே பங்கேற்று உரையாற்றி கட்சியினரை உற்சாகமூட்டி வருகிறார். இதற்கிடையே உட்கட்சித் தேர்தல்கள் முழுமையாக நிறைவுபெற்று தலைமைக்கழக நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர், இதன் நீட்சியாக பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியலும் தலைமையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டு வருகின்றன.


வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் பத்து லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடு இளைஞரணி சார்பில் நடத்தப்படுமென்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் மற்றொரு வலிமைவாய்ந்த துணை அமைப்பான மாணவரணி சார்பில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனொருபகுதியாக கோவை தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக பொள்ளாச்சி, நஞ்சேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பெ.பூரணச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இளங்கலை பொறியியல் பட்டமும், சட்டத்துறையில் பட்டமும் பெற்றுள்ள பூர்ணச்சந்திரன் மாணவப்பருவத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

கோவை தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பூரணச்சந்திரனுக்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெ.பூரணச்சந்திரனை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், மாணவரணி மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Poornachandran dmk thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண