தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சுங்கச்சாவடி முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான இராஜகம்பளத்தார்கள் கைது!

சுங்கச்சாவடி முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான இராஜகம்பளத்தார்கள் கைது!

Radheyan 05 Feb 2024 | 05:13 PM
பகிர்:

தொட்டியநாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் வகுப்பினர் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று (04.02.2024) திருச்சி சமயபுரம் டோல்கேட் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதன் விவரம் வருமாறு,

1) 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5,000/- வழங்க வேண்டும்.

2) அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும்.

3) சீர்மரபு வகுப்பினருக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு DNC, DNT என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் DNT-யாக வழங்க வேண்டும்.

4) 2021-சட்டமன்ற தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் DNT ஒற்றை சான்றிதழ் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும்.

5) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, சீர்மரபினர் நலசங்கத்தின் பொதுச்செயலாளர் தவமணியம்மாள் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான தொட்டிய நாயக்கர் சமுதாய போராளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


இதனையடுத்து, ஒற்றை DNT சான்று, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள்ளார். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு toll gaie thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண