தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
காடிபட்டி ஊர்நாயக்கர் இயற்கை எய்தினார்!

காடிபட்டி ஊர்நாயக்கர் இயற்கை எய்தினார்!

Radheyan 08 Jan 2026 | 05:00 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா திருக்கூர்ணம் - காடிபட்டி ஊர் நாயக்கர் ஆர். பழனிச்சாமி நாயக்கர் (81) அவர்கள் வயது மூப்பு காரணமாக நேற்று (07.01.2026) மாலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், நிதி நிறுவன உரிமையாளருமான திரு.பி.சுப்பிரமணியம் அவர்களின் தந்தையாரும், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா திருக்கூர்ணம் - காடிபட்டி ஊர் நாயக்கருமான திரு. ஆர். பழனிச்சாமி நாயக்கர் (81) அவர்கள் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை இயற்கை எய்தினார். அன்னாரின் நல்லடக்கம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அரவக்குறிச்சி அருகேயுள்ள காடிபட்டியில் நடைபெற இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

காடிபட்டி ஊர் நாயக்கரின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆர்.பெருமாள், சட்ட ஆலோசகர் எம்.பார்த்தசாரதி, மண்டலப்பொறுப்பாளர் எம்.டி.எஸ்.பாண்டியன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு palanisamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண