தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சமுதாயத்திற்கு முதல் சங்கம் கண்டவரின் வாரிசு சட்டப்படிப்பில் முதல் தங்கம் வென்றார்!

சமுதாயத்திற்கு முதல் சங்கம் கண்டவரின் வாரிசு சட்டப்படிப்பில் முதல் தங்கம் வென்றார்!

Admin 14 Dec 2020 | 01:26 AM
பகிர்:

இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் முதல் சங்கம் கண்ட வலுக்கலொட்டி மைனர் P.S.M.பெருமாள் நாயக்கர் அவர்களின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு கட்டபொம்மன் பேரவையின் நிறுவனத்தலைவரும், அதிமுக பிரமுகருமான திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களின் மகனுமான R.கிருபாகர், திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் (2015-20)  B.A.,LLB (Hons) சட்டப்படிப்பை, முதல் வகுப்பில் தங்கப்பதக்கம் வென்று நிறைவு செய்தார். 12.12.2020-இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.A.P.சாஹூஅவர்கள் தங்கப்பதக்கம் வென்ற R.கிருபாகருக்கு  சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கினார்.

திரு.கிருபாகரின் இந்த சாதனைக்கு சமுதாய தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் R.கிருபாகருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker.com thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண