தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
DNT தொட்டிய நாயக்கர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக! திமுக-விடம் மனு!

DNT தொட்டிய நாயக்கர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக! திமுக-விடம் மனு!

Admin 04 Mar 2021 | 02:53 PM
பகிர்:

தமிழக அரசு சமீபத்தில் 108 சாதிகளை உள்ளடக்கிய MBC பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில், ஒருசாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கி தொட்டியநாயக்கர் உள்ளிட்ட மற்ற 107 சாதியினரின் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டது. இந்த உள் ஒதுக்கீட்டிற்கெதிராக தென்மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தும், மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சட்டத்திற்கு எதிராக உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.

பல்வேறு வகைகளில் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் அதேவேளையில், தங்கள் கோரிக்கையை வெற்றிபெறச்செய்ய அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் DNT சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகளை அணுகி தங்களுக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர். நேற்று (03.03.2021) மாலை சென்னையில் திமுக முன்னனித்தலைவர்களில் ஒருவரான திரு.தங்கதமிழ்ச்செல்வன் அவர்களை சீர்மரபினர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து, திமுக தேர்தல் அறிக்கையில் சீர்மரபினரின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக உறுதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker dnt thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண